எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஆக.20 அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மய்யம் மூலமாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய முதுநிலை படிப்புகள் யுஜிசி,ஏ அய்சிடிஇ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ தேர்வு அல்லது தொலை தூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும். அந்தவகையில் நடப்புக் கல்வி யாண்டில் (2023-2024) தொலைதூரக் கல்வி சேர்க் கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி மய்யத்தின் சார்பாக வழங்கப்படும் எம்பிஏ,எம்சிஏ, எம்எஸ்சி (சிஎஸ்) ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.  https:/cdefee.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து உரிய சான்றி தழ்களுடன் செப்.5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், எம்பிஏ, எம்சிஏ சேர்க் கைக்கான நுழைவுத் தேர்வு செப்.16ஆ-ம் தேதி நடை பெறும். ஏற்கெனவே டான் செட் தேர்வெழுதிய பட்டதாரிகள் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டிய கட்டாய மில்லை. எம்எஸ்சி படிப்புக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் கிடையாது.இது தொடர்பான கூடுதல் விவ ரங்களை மேற்கண்ட வலை தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை. தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *