எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.20 அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மய்யம் மூலமாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய முதுநிலை படிப்புகள் யுஜிசி,ஏ அய்சிடிஇ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ தேர்வு அல்லது தொலை தூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும். அந்தவகையில் நடப்புக் கல்வி யாண்டில் (2023-2024) தொலைதூரக் கல்வி சேர்க் கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி மய்யத்தின் சார்பாக வழங்கப்படும் எம்பிஏ,எம்சிஏ, எம்எஸ்சி (சிஎஸ்) ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.  https:/cdefee.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து உரிய சான்றி தழ்களுடன் செப்.5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், எம்பிஏ, எம்சிஏ சேர்க் கைக்கான நுழைவுத் தேர்வு செப்.16ஆ-ம் தேதி நடை பெறும். ஏற்கெனவே டான் செட் தேர்வெழுதிய பட்டதாரிகள் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டிய கட்டாய மில்லை. எம்எஸ்சி படிப்புக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் கிடையாது.இது தொடர்பான கூடுதல் விவ ரங்களை மேற்கண்ட வலை தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை. தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *