கோயிலில் மண் எடுத்த பா.ஜ.க.வினர் கைது

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 20 – ‘என் மண் என் தேசம்’ இயக்கத் துக்காக வில்லி வாக்கம் அகத்தீஸ்வரர் கோயி லில் பிடி மண் எடுக்க முயன்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட் டோரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 30ஆ-ம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரத மர் மோடி, ‘சுதந்திர நாளை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியா கம் செய்தவர்களின் நினைவாக ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங் கப்பட உள்ளது என்றும், இதற்காக நாட்டின் பல் வேறு பகுதிகளில்  இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற் றோடு சேர்த்து மரக் கன்று, செடிகளும் டெல் லிக்கு கொண்டு வரப் படும் என்றும், அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும்’ என் றும் தெரிவித்தார்.

இந்நிலையில், வில்லி வாக்கத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், அகத்தீஸ்வரர் கோயிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண்எடுத்து செல் லும் நிகழ்வு நடைபெற இருந்தது.

‘என் மண் என் தேசம்’ இயக்கத்துக்கு தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. மாநில செயலா ளர் வினோஜ் பி.செல் வம், இதில் கலந்து கொள்ள வந்தார். 

அப்போது பா.ஜ.க.வினரை கோயி லுக்கு செல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்தனர்.

இதனால், போலீஸா ருடன் பா.ஜ.க.வினர் வாக்கு வாதத்தில் ஈடுபட் டனர்.

இதையடுத்து வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற் பட்ட பா.ஜ.க.வினரை காவல் துறையினர் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத் தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *