மணக்கோலத்தில் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்ற இணையர்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் பட்டினிப் போராட்டம் நேற்று (20.8.2023)   நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில்   அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த போராட்டத்தின் போது திருமண மண்டபத்தில் இருந்து நேராக வந்த புதுமண இணையர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற   பட்டினிப்  போராட்டத்தில்  மணக்கோலத்தில் வந்து ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு அவர்களுடன் ஒளிப்படமும் எடுத்துக்கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *