தருமபுரியில் தி.மு.க. போராட்டம்: கழகப் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்

1 Min Read

அரசியல்

தர்மபுரி, ஆக. 21- தருமபுரியில்  மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் நடைபெற்ற பட்டினி போராட்டத்தை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடங்கி வைத்து பேசினார். 

மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பி.சுப்பிரமணியன், மேனாள் கல்வி அமைச்சர் பி. பழனியப்பன் மற்றும் 3 ஆயிரத் துக்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கழக தலைவர் கு. சரவ ணன், மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப் பினர் கதிர், கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாநில இளை ஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மேனாள் மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, நகர திராவிடர் கழகத் தலைவர் கரு.பாலன், மண்டல ஆசிரியர் அணி அமைப் பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, விடு தலை வாசகர் வட்ட தலைவர்  க. சின்னராஜ், பழனி  மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *