7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

செய்யாறு: காலை 10 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்*தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * எதிர் வரும் 13-07-2024 சனிக்கிழமையன்று நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் நம் செய்யாறுக்கு வருகை தர உள்ளதன் நோக்கத்தை வலியுறுத்தி திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் விளக்க உரையாற்றுகிறார். * திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் ,திராவிடர் கழக அனனைத்து பொறுப்பாளர்கள், கழக உறுப்பினர்கள் தவறாது கலந்துகொண்டு 13ஆம் தேதி வாகன பிரச்சாரம் சிறப்படைய செய்ய தாங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

செங்கல்பட்டு: காலை 10 மணி * இடம்: புத்தர் அரங்கம், காத்தான் தெரு, சாவி ஹால் எதிரில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு * பொருள்: நீட் இருசக்கர வாகன பரப்புரை பயணம் மற்றும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா *செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவ – மாணவிகளுக்கு

பரிசு – பாராட்டு விழா

பெரியகுளம்: காலை 10 மணி*இடம்: அழகர்சாமிபுரம், காளியம்மன் கோவில் தெரு, சத்துணவுக் கூடம் *தலைமை: அ.மோகன் (தேனி மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மு.இப்ராஹிம் பாஷா * துவக்கவுரை: அ.மாரிமுத்து (தலைவர், நம்மால் முடியும் நல சேவை சங்கம்) * முன்னிலை: செல்வராணி செல்வராஜ் (தலைவர், கீழவடகரை ஊராட்சி) * சிறப்பு அழைப்பாளர்கள்: கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம், சட்டமன்ற உறுப்பினர்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம் நகர்மன்ற தலைவர்), எல்.எம்.பாண்டியன் (திமுக), அ.தங்கவேலு* நன்றியுரை: கே.செந்தில்குமார்.

வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 4.30 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளி பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் *பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் * தலைமை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மு.சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), இ.அ.மதிவதனி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *ஆக்க உரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * சிறப்புரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கழக மகளிரணி, மகளிர் பாசறை, கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: பொ.தயாளன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழக இளைஞரணி), இர.க.இனியன் (மாவட்ட தலைவர், மாணவர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *