பதினைந்தே நாளில் பட்டா மாறுதல் தமிழ்நாடு அரசு ஏற்பாடு

Viduthalai
2 Min Read

கோவை, ஜூலை 05 வரு வாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பட்டா, ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக, 15 நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவையில் அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைப்ப தில்லை. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; எத்தனை முறை மனு கொடுத்தா லும் சரியான பதில் இல்லை.மனுக்களை உடனடியாக நிறைவு செய்ய சொல்லி மேலிடம் அழுத்தம் தருவதால், புகார் மீது தற்காலிக நடவடிக்கை எடுப்பது அல்லது நவடிக்கை எடுப்பதுபோல காட்டிக்கொள்வது காலங்காலமாகத் நடந்து வருகிறது.

அரசின் சேவைகளை குறிப்பி ட்ட காலத்துக்குள் பெறுவதற்கு சேவை பெறும் உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. இச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மக்களும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு, மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும்,இந்த அபராதத் தொகை சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கவும், குறித்த காலத்துக்குள் சேவை யளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இச் சட்டம் அமல்படுத்தப் பட்டால் கீழ்க்காணும் சேவைகள் உள்ளிட்ட அரசின் அனைத்துச் சேவைகளும் விண்ணப்பித்த நாளிலிருந்து குறிப்பிட்ட நாளுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். ரேஷன் கார்டு, 30 நாட்கள், வாரிசுச் சான்றிதழ் 15 நாட்கள், நிலப்பட்டா – பட்டா மாறுதல், பெயர் மாற்றம், 15 நாள், உட்பிரிவு செய்தல், 30 நாள். இறப்புச் சான்றிதழ் -7 நாள்,வருவாய் சான்றிதழ்- 15 நாள் ஜாதிச்சான்று ஏழு நாள், மின் இணைப்பு, 14 நாள், குடிநீர் இணைப்பு, 7 நாள். இதனால் அரசு சேவை எப்போது கிடைக்கும் என்று மாதக்கணக்கில் காத்திருப்பது தடுக்கப்படும்.தற்போது தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் வழங்கும் ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீதுஅதிகபட்சமாக,15 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் இந் நடவடிக்கையை மக்கள் வர வேற்றுள்ளனர். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கூறியதாவது: தமிழ்நாடு அரசின் நிலவ ருவாய்த்துதறை ஆணையரின் உத்தரவுப்படி வருவாய்த்துறை பணிகள் வேகமாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் வேகமாகவும் விரைவாகவும் பணி மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *