திருவாரூர், ஜூலை 4- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர, ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மறைந்த அம்மையார் ப.சுசீலா தேவி அவர்களின் படத்திறப்பு 2.7.2024 அன்று மதியம் 11 மணி அளவில் களப்பால் சம்பத்குமார் இல்லத்தில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திராவிடர் கழக நகர துணை செயலாளர் களப்பால் ப.சம்பத்குமார் அவர்களின் அம்மா மறைந்த ப.சுசிலா தேவி படத்தினை திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், களப்பால் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், சாமிநாதன் (திமுக), ப.பசுபதி புலிவலம்’ திருவாரூர் ஆகியோர் முன்னிலையில் சிவ.நாராயணசாமி, அம்மையார் படத்தினை திறந்து வைத்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
இரங்கல் தீர்மானம்
களப்பால் ப.சம்பத் குமாரின் தாயார் ப.சுசிலா தேவி அம்மையாருக்கு இக்கமிட்டி ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
நீட் எதிர்ப்பு பரப்புரை வாகன பயணம் வரும் 12.07.2024 அன்று சிறப்பான முறையில் முத்துப்பேட்டையில் 50 தோழர்களுடன் வரவேற்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்வில் திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவர் க.வீரையன், மன்னை மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், திருத் துறைப்பூண்டி நகர தலைவர் சு.சித்தார்த்தன், செயலாளர் ப.நாகராஜன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அஜெ.உமாநாத், தஞ்சை மாதவ ராஜன், மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.