கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு

Viduthalai
2 Min Read

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அறிவிப்பு

சென்னை, ஜூன் 28- கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­த­வர்­க­ளில் ஒரு லட்­சத்து 48 ஆயி­ரம் விண்­ணப் பங்­கள் ஏற்­கப்பட்­டுள்­ள­தாக சிறப்­புத் திட்ட செய­லாக்­கத்துறை தெரி­வித்துள்­ளது.
சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை சார்­பில், சட்­டப்­பே­ர­வை­யில், கொள்கை விளக்­கக் குறிப்பு தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதில், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­திற்­கென 2023-2024ஆம் நிதி­யாண்­டில் 8 ஆயி­ரத்து 124 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­தா­க­வும், 2024-2025ஆம் நிதி­யாண்­டிற் கென 13 ஆயி­ரத்து 722 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
திட்­டத்­தின் மூலம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை முகாம் வாழ் இலங்கை தமி­ழர் குடும்­பங்­கள் உட்­பட ஒரு கோடியே 15 லட்­சத்து 27 ஆயி­ரத்து 172 மக­ளிர் பய­ன­டைந்து வரு­வ­தாக தெரிவிக்கப்பட்­டுள்­ளது.
கலை­ஞர் உரி­மைத்­தொகை கோரி மேல்­மு­றை­யீடு செய்­த­வர்­க­ளில் ஒரு இலட்­சத்து 48ஆயி­ரம் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக் கொள்­ளப்பட்­டுள்­ள­தாக சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை கொள்கை விளக்­கக் குறிப்­பில் கூறப்­பட்டுள்­ளது. நிரா­க­ரிக்­கப்பட்ட மேல்­மு­றை­யீடு விண்­ணப்­ப­தா­ரர்­கள் விரும்­பி­னால், நிரா­க­ரிக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து 30 நாள்­க­ளுக்­குள் இ-சேவை மய்யம் வழி­யாக மேல்­மு­றை­யீடு செய்ய வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

குடியரசுத் தலைவர் உரை
5 முக்கிய பிரச்சினைகள் இடம் பெறவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ்நாடு
புதுடில்லி, ஜூன் 28- குடியரசுத் தலைவர் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித் துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
மோடி அரசு எழுதிக் கொடுத்த குடியரசுத் தலைவர் உரையை பார்த்தால் பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. நாடா ளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. ‘400 தொகுதிக ளுக்கு மேல் வெல்வோம்’ என்று அவர் கூறியும், மக்கள் பா. ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.
மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்கா தது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக குடியரசுத் தலைவரை பொய்களை படிக்க வைத்துள்ளார்.
விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, யில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சினைகள், குடியரசுத் தலைவர் உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *