புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருப்பு நாள் கடைப்பிடிக்கப்படும்!

1 Min Read

மேற்குவங்க பார்கவுன்சில் அறிவிப்பு

கொல்கத்தா, ஜூன் 27 மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் ஜூலை ஒன்றாம் தேதி கருப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும், அன்றைய நாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
”ஜூன் 25 இல் நடைபெற்ற பார் கவுன்சில் கூட்டத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை ஒன்றாம் தேதி கருப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய சட்டங்கள் மக்களுக்கு விரோதமானதாகவும், ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும், மக்களை சிரமத்தில் தள்ளும் விதமாகவும் உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை ஒன்றாம் தேதி மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள வழக்குரைஞர்கள் அனைவரும் எவ்வித நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரவர் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் புதிய சட்டங்களுக்கு எதிராக பேரணி நடத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (அய்பிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சி யங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயா் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையில் கடந்தாண்டு டிசம்பா் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு குடி யரசுத் தலைவா் திரவுபதி முா்மு கடந்த ஆண்டு டிசம்பா் 25 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, இந்தப் புதிய சட்டங்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *