வரலாற்றில் இன்று…

1 Min Read

திராவிடர் கழகம் உதயமான நாள்
அண்ணாதுரை தீர்மானம்

அரசியல்அரசியல்

கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் 27.8.1944 சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநில மாநாட்டில் “திராவிடர் கழகம்” பெயர் மாற்றத் தீர்மானத்தை தந்தை பெரியார் அவர்களே எழுதி தந்து, அண்ணாவின் பெயரில் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு “அண்ணாதுரை தீர்மானம்” என்றே பெயரிட்டார்.

அப்பொழுது அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழினைக் காஞ்சிபுரத்திலிருந்து நடத்திக் கொண்டு இருந்தார். அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைச் சந்திக்க ஈரோடு சென்று விட்டதால், அந்தக் குறிப்பிட்ட ‘திராவிட நாடு’ இதழ் ஈரோட்டிலேயே ‘குடிஅரசு’ அச்சிடப்படுகின்ற தமிழன் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு இதழ்கள் தோழர் ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களால் காஞ்சிபுரம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்தே ஏஜண்டுகளுக்கும், முக்கிய நீதிக்கட்சித் தலைவர்களுக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை ‘குடிஅரசு’ இதழில் அப்படியே இங்கு தருகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *