மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 26 மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.6.2024) நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதனை தெரி வித்தார். இதுதொடர்பாக தற்காலிக மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளாகவும், மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ராகுல் காந்தி ஆவார். அவருக்கு முன், சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தப் பதவியை வகித்தனர்.

நேற்று மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவியேற்றார். அரசமைப்புச் சட்டப் பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கி லத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசமைப்புச் சட்டம் வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பி னர்களும் கூட்டணி கட்சி களைச் சேர்ந்த உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *