ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

1 Min Read

அரசியல்

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் 17.08.2023 அன்று பெரியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது .இதில் சுமார் 350 பள்ளி மாணவ /மாணவிகள் கலந்துக்கொண்டனர் .எறிபந்து போட்டியில் 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில் மூன்று பிரிவுகளிலும் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர் மற்றும் 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர் .கைப்பந்து போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர் மற்றும் 14,19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர் .மேலும் முதல் இடம் பிடித்தவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர் .இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ/மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் ,ரவிசங்கர் ,ரஞ்சனி ஆகியோருக்கு பள்ளி தாளாளர் ,முதல்வர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *