கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

24.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
* நீட் தேர்வில் முறைகேடு – சிபிஅய் விசாரணை தொடங்கியது: பாட்னா, கோத்ராவுக்கு தனிப்படை விரைந்தது.
* நீட் – யுஜி தேர்வை முழுவதுமாக ரத்து செய்து, மறுதேர்வு வையுங்கள், தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்; புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு. நீட் தேர்வு மோசடி, தற்காலிக மக்களவைத் தலைவர் பிரச்சினைகளை எழுப்ப இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு.
* கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு: 750 பேர் எழுதவில்லை!
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எரிந்த பேப்பர்களில், ‘அசல்’ நீட் தாளுடன் பொருந்திய 68 கேள்விகளை பீகார் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்; ஒரே மாதிரியான வரிசை எண்கள், மய்யக் குறியீடு பொருந்தியுள்ளது. வினாத்தாள்கள் வருவதற்கு முன்பே கசிவு சாத்தியம் என்கிறார் ஹசாரிபாக் கல்லூரி முதல்வர்.
*பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை!
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வயநாட்டு மக்களுக்கு உணர்ச்சிகரமான கடிதம் எழுதிய ராகுல் காந்தி – அவர்களின் நிபந்தனையற்ற அன்பு தன்னைக் காப்பாற்றியது என்று கூறியுள்ளார்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *