பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 426ஆவது வார நிகழ்வு “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்ற தலைப்பில் 22-06-2024 அன்று மாலை 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்பில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எ.கண்ணன் முன்னிலையில் மேனாள் மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.அருமைநாதன் (காங்), ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் அரவிந்தன், சசிகுமார், ரவி, மணி சுமதி, பிச்சை மணி, உதயசூரியா, கெஜலட்சுமி, சதீஷ் குமார், சிகாமணி, ஆரோக்கியசாமி, ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி தோழர் ஜெயந்தி நன்றி கூறினார்.