ஆவடி, ஜூன் 24- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-06-2024 மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியு றுத்தி நடைபெற இருக் கும் இரு சக்கர வாகனப் பேரணியில் மாவட்டம் சார்பில் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர் களை பங்கேற்க செய்வது மற்றும் ஆவடி மாவட்ட எல்லைக்குள் இரு சக்கர வாகனப் பேரணி வரும்போது சிறப்பான முறையில் உற்சாக வரவேற்பு அளிப்பது விடுதலை சந்தா சேர்க்கும் பணியை தொய்வின்றி தொடர்வது ஆகிய தீர்மா னங்களை யொட்டி ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் பூவை செல்வி, துணை தலைவர் மு.ரகுபதி, இளைஞரணி செயலாளர் எ.கண்ணன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக் கேயன், துணை செயலா ளர் சுந்தர்ராஜன், பட்டா பிராம் பகுதி தலைவர் கோ.வேலாமுருகன், திரு முல்லைவாயல் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், அம்பத் தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், மதுர வாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி, பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், ஒன் றிய செயலாளர் சு.வெங்கடேசன், திருநின்றவூர் பகுதி இளை ஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், உடு மலை வடிவேல், வை. கலையரசன், முகப்பேர் முரளி, பூவை லலிதா, பெரியார் பெருந் தொண் டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், சென்னி கிருட்டிணன், ஆகியோர் உரையாற்றிய பின் மாநில கழக இளைஞரணி துணை செயலாளர் வழக் குரைஞர் சோ.சுரேஷ் இரு சக்கர வாகன பிரச் சார நோக்கம் மற்றும் திட்டமிடல் விடுதலை சந்தா சேர்ப்பு குறித்து விளக்கவுரையாற்றினார்.
மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் நிறை வுரையாற்றிய பின் இறுதியாக மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இரு சக்கர வாகன பிரச்சார நோக்கம் – திட்டமிடல் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல்

Leave a Comment