திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

திருத்துறைப்பூண்டி, ஜூன்23– திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம் சிதம்பர கோட்டகத்தில் உள்ள ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் இல் லத்தில் 16.06.2024 அன்று மாலை 5 மணி அளவில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் கி.அருண் காந்தி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இரா.நேரு, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தீர்மானங்கள்
நாகை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு இக்கமிட்டி ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

உலகில் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரம் சார்பாக பெருமளவில் விடுதலை சந்தாக்களை வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடியரசு நூற்றாண்டு விழா கூட்டங்கள் ஒன்றியம் முழுவதும் பரவலாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

அடுத்த மாதம் திருத்துறைப் பூண்டி நகரத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறப்பாக வரவேற்று பொதுக்கூட்டத்தை மிக எழுச்சி யோடு நடத்துவது என இக்கூட்டம் வாயிலாக தீர்மானிக்கப்படுகிறது.

நிகழ்வில் வருகைதந்தோர்: மன்னார்குடி மாவட்ட இணை செயலாளர் விக்ரபாண்டியம் வீ.புஷ்பநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அஜெ.உமாநாத், நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகரச் செயலாளர் ப.நாகராஜன், மாவட்ட ப.க துணை தலைவர் ரெ.புகழேந்தி, மாராச்சேரி ச.சுரேஷ், சு.மலர்விழி, ஒன்றிய துணைச் செயலாளர் ந.செல்வம், நகர மகளிரணி தலைவர் கி.கலாவதி, ஒன்றிய மகளிரணி தலைவர் நா.ரேவதி கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *