ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் வெறும் கண்துடைப்பே! – காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து

1 Min Read

புதுடில்லி, ஜூன் 23 நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் முறை கேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறை கேடுகள் தடுத்தல்) சட்டம், 2024′ என்ற சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டம் வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘‘கடந்த 7 ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்து உள்ளன. ஆனால் பாரதீய ஜனதா ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? நீட் தேர்வு முறைகேட்டில் பாரதீய ஜனதா எவ்வளவு முயற்சிகள் செய்தாலும், ஊழல் மற்றும் கல்வி மாபியாவை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது” என குறிப்பிட்டு இருந்தார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கடந்த 13.2.2024 அன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றிருந்தும்21.6.2024 இரவுதான் அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கார்கே, இந்த விவகாரத்தில் சட்டம் அமல்படுத்தப்பட்டது என கல்வி அமைச்சர் ஏன் பொய் கூறினார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சட்டத்துக்கான விதிமுறைகளை இன்னும் சட்ட அமைச்சகம் வகுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *