நீட் – நெட் தேர்வு மோசடிகளால் 33 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன 22- நீட்- நெட் தேர்வு மோசடிகளால் 33 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
நடப்பு ஆண்டு நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடைபெற்ற மோசடி காரணமாக நாடு முழுவதும் 33 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில்வினாத்தாள் கசிந்தது டன், கருணை மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு குளறு படிகள் அரங்கேறின.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடை பெற்று வருகிறது. நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக யு.பி.எஸ்.சி தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வு குளறுபடிகள் காரணமாக தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்குமா? அல்லது மீண்டும் மறு தேர்வு எழுதும் நிலை வருமா?என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

இதனிடையே, நீட் தேர்வு மோசடியை எதிர்த்து தொடரப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீது ஜூலை 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விரிவான விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையே தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜிசி- நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெட்கேள்வித்தாள் டார்க் நெட் இணையதளம் மற்றும் டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியானதாக தேசிய சைபர் கிரைம்பிரிவு அளித்த தகவலின் பேரில், நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், கசிந்த யுஜிசி நெட் கேள்வித்தாள் 500 ரூபாய் முதல்5 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் நெட் தேர்வினை எழுதிய 11 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *