குற்றாலம் பயிற்சி முகாமிற்கு அதிக மாணவர்களை பங்கேற்க வைக்க குமரி மாவட்ட கழகம் முடிவு!

1 Min Read

நாகர்கோவில், ஜூன் 20- குமரிமாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலர் பெரியார் தாஸ், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் உரையாற்றினர்.

தோழர்கள் தும்பவிளை மு.பால்மணி, நல்லூர் பெருமாள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்
குற்றாலத்தில் ஜூலை 4 முதல் 7 வரை நடை பெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக அதிகமான மாணவர்களை பங்கேற்க வைப்பது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள், பரப்புரை கூட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துவது, நீட்தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி பரப்புரை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *