அகற்றப்பட்ட தலைவர்களின் சிலைகளை அங்கேயே வைக்கவேண்டும் கார்கே கோரிக்கை

1 Min Read

புதுடில்லி, ஜூன் 20 காந்தியார் அம்பேத்கா் உள்ளிட்ட தேசத் தலை வா்களின் சிலைகளை நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார், அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அவை பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் நாடாளுமன்ற நூலகத்துக்கும் இடையிலான புல்வெளி பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அந்த இடத்தில் பழங்குடி இனத் தலைவா் பிர்சா முண்டா, ராணா பிரதாப் சிங் உள்ளிட்டோரின் சிலைகள் உள்பட அனைத்து தலைவா்களின் சிலைகளும் உள்ளன.

நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்காக காந்தியாரின் சிலை முன் கூடுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்கவே சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கி ரஸ், இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்துக்கு வருப வா்கள் சிலைகளை ஒரே இடத்தில் காண்பதற்கு வசதி யாக இந்த இடமாற்றம் செய்யப் பட்டதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்தது.

இந்நிலையில் இரு அவை களின் தலைவா்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘தேசத் தலைவா்களின் சிலைகள் எவ்வித வலுவான காரணங்களும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டன. எவ்வித ஆலோசனையும் இன்றி இதுபோன்று சிலைகளை அகற்றுவது ஏற்க முடியாது. இது நாட்டின் ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது. எனவே, சிலைகளை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய தலைவா்களின் சிலைகள், உருவப் படங்களை வடிவமைப்பவது குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. இது மிகவும் தவறான செய லாகும்’ என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *