புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்

viduthalai
1 Min Read

புதுக்கோட்டை, ஜூன் 18- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.6.2024) தொடங்கி வைக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சங்க கால வரலாற்று சின்னங்களைக் கொண்ட பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் கோட்டை சுவர், அரண்மனை – திடல் போன்ற இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பில் கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரை முதற்கட்ட அகழாய்வு நடைபெற்றது. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைக்கப்பெற்ற தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி, பாசி மணி, பல விதமான பானை ஓடுகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் குறித்த விரிவான அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கும் அனுமதி கோரப்பட்டது.

அரசு அனுமதி:

மேலும், அகழாய்வுப் பணிக்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கு அரசு அனுமதி அளித்தது. அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று (18.6.2024) தொடங்கி வைக்கிறார்.
பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *