காற்று மாசு: சென்னையில் 2030ஆம் ஆண்டில் 27 விழுக்காடு அதிகரிக்கும் தனியார் நிறுவனம் எச்சரிக்கை

Viduthalai
1 Min Read

பெங்களுரு, ஆக. 30 – 2030ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்கும் என தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட் பம் மற்றும் கொள்கை ஆய் வுக்கான மய்யம் 2019_-2020ஆ-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப் படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இதில், தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் மாசு அதிகமாக இருப்பதும், சென்னையில் தூத் துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப் பதும் கண்டறியப்பட் டுள்ளது. 

மாசுவை குறைக்க நட வடிக் கைகள் எடுக்காமல் தற்போது உள்ளபடியே தொழில் நடவடிக் கைகளை தொடர்ந்தால் 2030ஆ-ம் ஆண்டு சென்னை, திருச்சியில் அதிகபட்சமாக 27 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் மாசு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசுவை குறைப் பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030-க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போ துள்ள நிலையில் இருந்து திருச்சியில் 36 சதவீதமும், மதுரை, சென்னையில் 27 சத வீதமும், தூத்துக்குடியில் 20 சதவீதமும் குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடு

இதுகுறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மய்யத்தின் மூத்த ஆய்வாளர் பிரதிமாசிங் கூறும் போது, ‘எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற் சாலைகள் மற்றும் போக்கு வரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப் பாட்டு விதிமுறைகளை பின் பற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *