கடலூரில் டி.எஸ்.டி. பேருந்து உரிமையாளர் தேசிங்ராஜன் இல்ல மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

Viduthalai
1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சகோதரர் மறைந்த கி. தண்டபாணியின் மகன் தேசிங்ராஜன் – அருள்மொழி இணையரின் மகன் தமிழரசன் மற்றும் குணசேகரன் – அனிதா இணையரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோரின் இணையேற்பு விழாவினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். உடன்: மதிமுக கொள்கை அணி விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன், திமு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி, கடலூர் மேயர் சுந்தரி ராஜா, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கோ.செல்வமணி, மோகனா வீரமணி, இரா. பன்னீர்செல்வம், தண்டபாணி, கடலூர் வர்த்தகர்கள் சங்க தலைவர் துரைராஜ் மற்றும் மணமக்களின் உறவினர்கள், கழகத் தோழர்கள் உள்ளனர். (கடலூர், 9.6.2024)

➡தமிழரசன் – பிரியதர்ஷினி ஆகியோரின் மணவிழாவிற்கு வருகை தந்த வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (கடலூர் 9.6.2024)

திராவிடர் கழகம்

➡ ம.தி.மு.க. கொள்கை அணி விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன் – வே. உமா. மகேஸ்வரி இணையருக்கு 40 ஆண்டுக்கு முன்பு தமிழர் தலைவர் தலைமையில் மணவிழா நடைபெற்றது. 40ஆம் ஆண்டு மண நாளில் அடி எடுத்து வைக்கும் ஆ.வந்தியத்தேவன் – வே. உமாமகேஸ்வரிக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் தோழர்கள் உள்ளனர்.

திராவிடர் கழகம்

 

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *