அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்

1 Min Read

சென்னை, ஜூன் 9 கலை- அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கலை- அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை 10.6.2024 அன்று முதல் தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு உயா்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்சி. பி.காம். பி.ஏ. என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-2025-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவா்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினா்.
இந்த சூழலில், கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களைப் பெற்றனா்.
இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா். 2-ஆம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *