பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

பழனி, ஆக. 30- பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் அறப்போர்,  கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதைச் சுடரொளி கள் நினைவேந்தல் பொதுக்கூட் டம் 25.-8.-2023 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வை பழனி மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்விற்க்கு பழனி நகரத் தலைவர் சி.இராதாகிருட்டிணன் தலைமையேற்க, மாவட்ட ப.க தலைவர் ச.திராவிடச்செல்வன்,  ஒட்டன்சத்திர நகரத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன், பழனி செந்தில், வேடசந்தூர் இராம கிருட்டிணன், பெ.இரணியன்,  அறிவழகன், புரூஸ் பெரியார், 

ச.பாலசுப்பிரமணி,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் தி.மு.க, நகரச்செயலாளர் வேலுமணி மேனாள் மாவட்டத் தலைவர் சுய மரியாதைச் சுடரொளி சி.பாலசுப் பிரமணியன் அவர்களின் படத்தை பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி அவர்களின் முன்னிலை யில் திறந்து வைத்து உரையாற்றினார்.

இறுதியாக திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கழகத்தோழர்கள், தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க., தமிழ் புலிகள்., ஆதித்தமிழர் கட்சி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக்., பெரியாரிய உணர்வாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இறுதியாக மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் ப.பாலன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *