மராட்டியத்தில் சுயேச்சை உறுப்பினர் காங்கிரஸில் இணைந்தார்

1 Min Read

காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 100 ஆனது

புதுடில்லி, ஜூன் 7- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தின் சாங்லி மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால் பாட்டீல். மராட்டிய மேனாள் முதலமைச்சர் வசந்தடாடா பாட்டீ லின் பேரனான விஷால் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போதைய தேர்தலில் சாங்லிதொகுதி சிவசேனா’ கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அவர் சுயேச்சையாக களம் இறங்கினார்.

இந்த நிலையில் விஷால் பாட்டீல் நேற்று (6.6.2024) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தலைநகர் டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

பின்னர் அவர் காங்கிரஸ் மேனாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். சுயேச்சை மக்களவை உறுப்பினர் விஷால் பாட்டீல் காங்கிரசில் இணைந்ததன் மூலம் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *