மயிலாடுதுறை நகர கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவரது கண்கள் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டன. 3.6.2024 காலை 12 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் எந்தவித சடங்குமின்றி புறப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் செயலாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், ஒன்றிய தலைவர் டி.வி.இளங்கோவன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், துணைத் தலைவர் இரெ.புத்தன், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், சீர்காழி ஒன்றிய தலைவர் ஆ.ச.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள் தாஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தங்க.செல்வராஜ், தோழர் ரஷீத்கான், அண்ணாதுரை மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை கழகத் தோழர் தங்க வீரபாண்டியன் மறைந்தார்!
1 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
