வடக்கில் தொடரும் கொடூரம்

Viduthalai
1 Min Read

தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து சிறுநீர் கழித்த கொடுமை

அரசியல்

மும்பை, செப். 1– ஒரு குழு சில இளைஞர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டிருந்த காட் சிப்பதிவு இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது. அது குறித்து மராட்டிய காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் அந்த காட்சிப் பதிவில் துன்புறுத்தப்பட்டவர் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரும், அவருடன் சேர்த்து இன்னும் மூன்று சிறுவர்களும் அடைந்த துன்பங்களை காவல் துறையினரிடம் கூறியுள்ளார். அதனைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர். 

பாதிக்கப்பட்ட வாலிபர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:- “அவர்கள் என் கால் களை கட்டி தலைகீழாக தொங் கவிட்டு அடித்து துன்புறுத்தினர். என்னுடன் சேர்த்து மேலும் 3 சிறுவர்களும் அவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான். அவர் கள் எங்கள்மீது சிறுநீர் கழித் தனர். இன்னும் பல கேவலமான செயல்களை எங்களை செய்ய வைத்தனர். நாங்கள் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கள்”. இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். 

கூடவே அவர், இந்த கொடும் செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார். அவர்கள் பப்பு பார்கே, ராஜு போர்கே, யுவராஜ் கலண்டே மற்றும் நானா பாட்டீல் ஆகி யோர் ஆவர். இந்த கொடூர நிகழ்வு அனைத்தும் யுவராஜ் கலண்டே வீட்டில்தான் நடந்து உள்ளது.  இந்தப் புகாரின் அடிப் படையில் காவல்துறை, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். அதில் ஒருவர் மட்டும் சிக்கி உள்ளார். மேலும் தப்பி ஓடிய எஞ் சிய நபர்களை காவல்துறையி னர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *