பாலசோர், மே 31- மார்ட்டின் லூதர்கிங், மண்டேலா, அய்ன்ஸ்டீன் ஆகியோர் காந்தியாரால் உத்வேகம் பெற்றனர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களுக்கு காந்தியார் பற்றி தெரியாது என்று ராகுல்காந்தி கூறி யுள்ளார்.
காந்தியார் பற்றி தெரியாது
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, ஒடிசா மாநிலம் பால சோர் மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அங்கு அவர் பேசியதாவது:-
‘காந்தி’ என்ற படத்தின் மூலம்தான் காந்தியார் பற்றி உலகம் தெரிந்துகொண்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’வில் பயிற்சி பெற்றவர்கள், கோட்சேவை பின்பற்றுபவர்கள். அவர்களுக்கு காந்தியார் பற்றி எதுவும் தெரியாது. இந்தியா பற்றியோ. வாய்மை பற்றியோ, அகிம்சை பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, பிரதமர் மோடி, காந்தியார் பற்றி பேசியது எதிர்பார்த்ததுதான்.
மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா, அய்ன்ஸ்டீன் ஆகியோர் காந்தியாரின் தத்துவங்களால் உத்வேகம் பெற்றனர். பல்வேறு சுதந்திர போராட்ட இயக்கங்களும் காந்தியாரால் உத்வேகம் பெற்றன. இந்தியாவின் குழந்தைகளும் காந்தியாரால் உத்வேகம் பெற்றனர்.
எனவே, இந்த பிரச்சினை பற்றிமேற்கொண்டு பேசுவது தேவையற்றது. ‘ஷாகா’வில் தான் அவர்களது உலகம் இருக்கிறது. பாரதீய ஜனதா பிரமுகர் ஒருவர், ‘புரி ஜெகன்னாதர், மோடியின் பக்தர்’ என்று பேசினார். இப்படி பேசி, ஒடிசா மக்கள் ஒவ்வொருவரையும் பாரதீய ஜனதா இழிவுபடுத்தி விட் டது.
பாரதீய ஜனதாவும், பிஜு ஜன தாதளமும் கைகோர்த்து செயல்படு கின்றன. இரண்டு கட்சிகளும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றன. ஏழைகளுக்கு எதுவும் செய்வது இல்லை. ஒடிசாவின் வளங்களை கொள்ளையடிக்கின்றன.
பாரதீய ஜனதாவை எதிர்த்து போராடியதால், என் மீது 24 அவதூறு மற்றும் கிரிமினல் வழக்குகளை ஒன்றிய அரசு தொடர்ந்துள்ளது. என்னை அமலாக்கத்துறை 50 மணி நேரம் விசாரித்தது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பாரதீய ஜனதா பறித்துக்கொண்டது. என் வீட்டையும் பறித்தது. நவீன் பட்நாயக், பாரதீய ஜனதாவை எதிர்த்து போராடி இருந்தால், ஏன் ஒரு வழக்குகூட அவர் மீது போடப்படவில்லை?
‘அக்னிவீர்’ திட்டம் ரத்து
தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், பா.ஜனதாவும் கைகோர்த்து செயல்பட்டன. இரு கட்சிகளின் முதுகெலும்பையும் காங்கிரஸ் உடைத்து விட்டது.
அங்கு மக்கள் அரசு இயங்கி வருகிறது. ஏழைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளிக்கப்படுகிறது. பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்கி றார்கள். அதுபோல் ஒடிசாவிலும் செய்வோம். பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை தொழிலாளர்கள்’ ஆக்கி விட்டார். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், ‘அக்னிவீர்’ திட்டம் ரத்து செய்யப்படும். வீரர்கள் மீண்டும் ‘வீரர்கள்’ ஆக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம், உணவக வசதி அளிக் கப்படும். அவர்கள் இறந்தால், தியாகி தகுதி அளிக்கப்படும்.
அரசமைப்புச் சட்டத்தை
அழிக்க முடியாது
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட தகுதி அளிக்கப்படும். பாரதீய ஜனதா, பெரும்பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால், நாங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம்.
‘மகாலட்சுமி’ திட்டம் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். பூமியில் எந்த சக்தியாலும் அரசியல் சட்டத்தை அழிக்க முடியாது. நான் அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பேன்.
-இவ்வாறு அவர் பேசினார்.