இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்: லாலுபிரசாத்

Viduthalai
1 Min Read

பாட்னா, மே 30 மக்கள வைத் தோ்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார். பாட்னாவில்செய்தியா ளா்களை 28.5.2024 அன்று சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடி தன்னை ‘கடவுளின் அவதாரம்’ என்று கூறிக் கொள்ளத் தொடங்கிவிட்டார். கடவுளால் அனுப்பப் பட்டவா் என்றும் பேசியுள்ளார். தோ்தல் முடிவுகள் வெளி யாகும்போது இதற்கான விடை கிடைத்துவிடும். மோடி ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜக தலைமை யிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்வதும், அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்பது உறுதியாகும் என்றார்.

‘எக்ஸ்’ வலைதளத்தில் லாலு வெளியிட்ட பதிவில், ‘அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கா் போன்ற தலைவா்களை பாஜகவும் அதன் தலைவா்களும் பல முறை இகழ்ந்துள்ளனா். இப்போது, அதனை மாற்றவும் பாஜக முயற்சித்து வருகிறது. அம்பேத்கா் இயற்றி னார் என்ற ஒரே கார ணத்துக்காக அரச மைப்புச் சட்டத்தை மாற்றுவதில் பிரதமா் மோடி தீவிரம் காட்டி வருகிறார்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *