வாயால் கெடும் பிரதமர்!

1 Min Read

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல் நல பாதிப்பின் பின்னணியில் சதி இருக்கிறது என்றும், அது குறித்து தேர்தலுக்குப் பின் விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டுள்ளார். இது ஒடிசா மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவருடைய தனிப்பட்ட உடல் நலம் குறித்து இப்படி எல்லாம் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகா? பேசுவதற்கு பொருள் ஏதும் இல்லாத நிலையில், வாயில் வந்ததெல்லாம் பேசுவது என்பது மோடியின் வழமையான முறையாக மாறிவிட்டது.
‘வாயால் கெடுவது’ என்பார்களே, அது இதுதானோ!
25% இட ஒதுக்கீடு!
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு உரிய 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 767 விண்ணப்பங்கள் தகுதி உடையதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *