தேர்தல் ஆணையம் பா.ஜ.கவிற்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுகிறது தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

1 Min Read

சென்னை, மே 25- தேர்தல் ஆணையம் பா.ஜ.கவிற்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டி யுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஒருமைப் பாட்டில் அக்கறை செலுத்த வேண்டிய பிரதமர் மோடி, ஒடிசாவுக்கு சென்று தமி ழர்களை அவமானப்படுத் தும் வகையில் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடியின் மீது புகார் கொடுத்தால் அவரை விசாரிக்காமல் பாஜகவின் தலைமைக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கையால் தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சி களுக்கு இருக்கும் நம் பிக்கையை குறைத்து விட் டதாக கூறினார். தேர்தல் ஆணையம் முழுக்க, முழுக்க மோடிக்கும் பாஜகவுக்கும் சாதகமாக செயல்படுகிறது என்றும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் இதையெல்லாம் நீதிமன்ற த்தில் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *