‘விடுதலை’ சந்தா வழங்கல்

1 Min Read

நன்கொடை

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழின் 90ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.50,000/-அய் திண்டுக்கல்  க.பரமச்சந்திரன், இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசனிடம் வழங்கினர். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர்   இரா.வீரபாண்டியன், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை செயலாளர் மு.நாகராசன், துணைச் செயலாளர் தி.க.செல்வம், மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, நகர செயலாளர்   த.கருணாநிதி, பசீர் அகமது, விமல் சந்தோஷ் ஆகியோர் உள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர், திமுக மாநகர செயலாளர் சண். இராமநாதன் அவர்கள் ஜூன் 1-ஆம் தேதி 90 ஆவது பிறந்தநாள் காணும் விடுதலைக்கு 20 ஆண்டு சந்தா தொகை ரூ.40,000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாநகரஇணைச்செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார். (24-05-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *