கருநாடக அரசியலில் பி.ஜே.பி.,க்கு அடி! பாலியல் குற்றவாளி பேரன் ரேவண்ணாவுக்கு தேவகவுடா எச்சரிக்கை!

Viduthalai
2 Min Read

பெங்களூரு, மே 25 கருநாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க பன்னாட்டளவில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

மேலும், அவரது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி மாநில அரசும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. இந் நிலையில், தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்து தேவகவுடா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேனாள் பிரதமரும் மஜத கட்சி மூத்த தலைவருமான தேவகவுடா தனது ‘எக்ஸ்’ சமுக வலைதள பக் கத்தில் பதிவிடுகையில், ‘‘பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உட னடியாக திரும்பி வந்து சட்ட நட வடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண் டும் என்று எச்சரிக்கை விடுத்துள் ளேன். இனியும் அவர் என் பொறு மையைச் சோதிக்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘‘கடந்த மே 18ஆம் தேதி நான் கோவிலுக்கு பூஜை செய்யச் சென்றபோது பிரஜ் வல் ரேவண்ணாவை பற்றி ஊடகங் களிடம் பேசினேன். அவர் எனக்கும், எனது முழு குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஏற் படுத்திய அதிர்ச்சி மற்றும் வலியி லிருந்து மீள எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் சட்டத்தின் கீழ் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங் கப்பட வேண்டும் என்று நான் ஏற் கெனவே கூறியுள்ளேன். கடந்த சில வாரங்களாக எனக்கும் எனது குடும் பத்தினருக்கும் எதிராக மக்கள் கடு மையான வார்த்தைகளைப் பயன் படுத்தி வருகின்றனர்.

அனைத்தையும் நான் அறிவேன். நான் அவர்களை தடுக்க விரும்ப வில்லை. அவர்களை நான் விமர் சிக்க விரும்பவில்லை. எல்லா உண் மைகளும் விரைவில் வெளிவரும். பிரஜ்வலின் செயல்பாடுகள் எனக்கு தெரியாது என்று மக்களை நம்ப வைக்க முடியாது. அவரைக் காப் பாற்ற எனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர்களை நம்ப வைக்க முடியாது.
அவருடைய நடமாட்டம் எனக் குத் தெரியாது, அவருடைய வெளி நாட்டுப் பயணத்தைப் பற்றி எனக் குத் தெரியாது என்று என்னால் அவர்களை நம்ப வைக்க முடியாது. என் மனசாட்சிக்கு பதிலளிப்பேன் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில், ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும்.

பிரஜ்வாலை கடுமையாக எச் சரித்து, அவரை எங்கிருந்தாலும் திரும்பி வந்து காவல்துறையில் சர ணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட் படுத்த வேண்டும்.

இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது எனக்கு மிகவும் முக்கியமானது.

எனது அரசியல் வாழ்வில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் என்னுடன் நின்றார்கள், மக்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். நான் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை ஒரு போதும் வீழ்த்த மாட்டேன்” என தனது அறிக்கையில் தேவகவுடா குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *