பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.9.2023 அன்று மாலை மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லத்தில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டது. மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் நகரத்தலைவர் ந.ஆறுமுகம் முன்னிலை ஏற்றனர். இக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வினை கொண்டாடும் விதமான கருத்துகளையும், கழக வளர்ச்சி, கிளைக் கழகம் உருவாக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. நகரச் செயலாளர் அ.ஆதிசிவம் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடிவுற்றது.