பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்

1 Min Read

அரசியல்

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.9.2023 அன்று மாலை மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லத்தில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டது. மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் நகரத்தலைவர் ந.ஆறுமுகம் முன்னிலை ஏற்றனர். இக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வினை கொண்டாடும் விதமான கருத்துகளையும், கழக வளர்ச்சி, கிளைக் கழகம் உருவாக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. நகரச் செயலாளர் அ.ஆதிசிவம் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *