சென்னை தொழிலதிபர் திருமதி சரோஜ் கோயங்கா அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

viduthalai
1 Min Read

சென்னையை வாழ்விட மாகப் பல ஆண்டு காலம் கொண்டிருந்தவரும், சிறந்த நிர்வாகத் திறமையாள ருமான திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் இன்று 24.5.2024 முற்பகல் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

சென்னை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் – சென்னை எக்ஸ்பிரஸ் மால் முதலிய பலவற்றை தனது முதுமை யிலும் சிறப்பாக நடத்தி வந்தவர். எவரிடமும் பான்மையுடனும், பண்புடனும் பழகியவர். அவரது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், அவ்வமைப்புகளின் ஊழியர்கள் அனைவருக்கும் நமது ஆறுதல் – மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

நெருக்கடி கால நிலையை துணிவுடன் எதிர்த்து நின்றவர், கல்வி வள்ளல் காமராசரின் மிக நெருங்கிய நண்பரான தொழிலதிபர் இராம்நாத் கோயங்காவின் மருமகள் திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயம் மிக்க அம்மணியார்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

24.5.2024

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *