மக்களவைத் தேர்தல் கருநாடகாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்! முதலமைச்சர் சித்தராமையா உறுதி!

viduthalai
1 Min Read

பெங்களூரு, மே 23– மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கருநாடக மாநிலத்தில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் இரண்டு கட்டங்களாக அங்கு வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சித்த ராமையா சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “மக்களவைத் தேர்தலைப் பொறுத்த வரையில் கருநாடகாவில் குறைந்தது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெறும். அதிகபட்சமாக அந்த எண்ணிக்கை 20 இடங்களாக கூட அதிகரிக்கலாம். மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதி களிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. போல காங்கிரஸ் சொல்லவில்லை.

அதே போல கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அய்ந்து உத்தரவாதங்களை அமலுக்கு கொண்டு வந்துள் ளோம். அது தொடரும். மேலும், மாநில அமைச்சரவையை மாற்றி அமைவது இப்போதைக்கு இல்லை. கட்சியின் மேலிட தலைவர்கள் தரும் ஆலோசனையின்படி செயல்பட்டு வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

கருநாடகாவில் பா.ஜ.க.மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் 25 தொகுதிகளில் பா.ஜ.க.போட்டியிட்டது. காங்கிரஸ்28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.அங்கு பெண்களுக்கு மாதம்ரூ.2,000 வழங்கி வருகிறது காங்கிரஸ் அரசு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *