பாளையங்கோட்டை சுப. சீத்தாராமன் அவர்களின் மருமகன் மறைவிற்கு இரங்கல்

0 Min Read

தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினரும், மேனாள் மாநில என்.ஜி.ஓ. சங்கத்தின் பொதுச் செயலாளரும், சீரிய பகுத்தறிவாளரும், நம்மிடம் மிகவும் நேசம் கொண்டவரு மான பாளையங்கோட்டை மானமிகு சுப. சீத்தாராமன் அவர்களின் மருமகன் – ம.தி.தா. இந்துக் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் அ. சுந்தரம் (சிறந்த பகுத்தறிவாளர்) உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியி ருக்கும் அருமைத் தோழர் மானமிகு சுப. சீத்தாராமன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
22.5.2024 திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *