தஞ்சையில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்

1 Min Read

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் தஞ்சாவூர் கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மா.செல்வராசு விடுதலைக்கு மூன்றாண்டு சந்தா ரூ.6,000 வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மருத்துவர் தமிழ்மணி ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2,000 வழங்கினார். தஞ்சாவூர் மதன்ஜிம் உரிமையாளர் பேச்சிமுத்து ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உரத்தநாடு புதூர் மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர் அன்புகாந்தி ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உடன் கட்டட பொறியாளர் ப.பாலகிருட்டிணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர்.மா.திராவிடச்செல்வம், புலவர்.இரா.மோகன்தாசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ந.காமராசு, தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் அழகு.இராமகிருட்டிணன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *