தேர்தல் ஆணையத்தின் புதிய சதவீத கணக்குகளின் படி வாக்களித்தவர்கள் எண்ணிக்கை திடீரென்று ஒரு கோடி உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. பல மாநிலங்களில் தேர்தலின் போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேவேளையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிலும் நம்பகத்தன்மை இல்லை என விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே – இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களை மட்டும் குறி வைத்து – இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, வாக்குப்பதிவு விவரங்களை வெளி யிட்டதிலும் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளன.
குறிப்பாக முதல் கட்ட, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தபின்னர் வாக்குப்பதிவு சதவீதங்களை உடனடியாக வெளியிடாமல் இழுத்தடித்த தேர்தல் ஆணையம், முதலில் ஒரு புள்ளி விவரத்தையும், பின்னர் வேறு ஒரு புள்ளி விவரத்தையும் வெளியிட்டது. அதன்படி திரிபுரா மாநிலத் தில் 100 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவ ரங்களை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை எழுப்பியது.
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதங்களையும், வாக்களித்த வர்கள் எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசண் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். மேலும் அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது கருத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளி யிட்ட புதிய சதவீத கணக்குகளின் படி வாக்களித்தவர்கள் எண்ணிக்கை திடீரென்று ஒரு கோடி வரை உயர்ந்துள்ளது. நான்கு கட்ட வாக்கு. பதிவின் போது தேர்தல் ஆணையம் முதலில் 65.4% வாக்குகள் பதிவானதாக தெரிவித்தது. பின்னர் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி 66.9% வாக் குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் கணக்குகளின் படி பார்க்கும்போது ஒரு கோடி வாக் குகள் (1.07 கோடி) அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது சராசரியாக தொகுதிக்கு 28,000 வாக்குகள் உயர்ந்துள்ளன. இதனை ஆய்வு செய்ததில் முதற்கட்ட வாக்குப் பதிவில் 18 லட்சம் வாக்குகளும், இரண்டாம் கட்டத்தில் 32 லட்சம் வாக்குகளும், மூன்றாம் கட்டத்தில் 22 லட்சம் வாக்குகளும், நான்காம் கட்டத்தில் 34 லட்சம் வாக்குகளும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக அசாமில் தொகுதிக்கு சராசரியாக 73 ஆயிரம் வாக்குகள் உயர்ந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் தொகுதிக்கு 69 ஆயிரம் வாக்குகள் உயர்ந்துள்ளன. கேரளாவில் தொகுதிக்கு 57 ஆயிரம் வாக்குகளும், கருநாடகாவில் 51 ஆயிரம் வாக்குகளும், மகாராட்டிராவில் 48 ஆயிரம் வாக்குகளும் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக உயர்ந்துள்ளன.
வாக்குப்பதிவு முடிந்த உடன் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் வெளியிட வேண்டும் என்று அரசி யல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் வாக்களித்த வர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட மறுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நான்கு கட்ட தேர் தலுக்குப் பிறகு வெளியான இந்த வாக்குப்பதிவு அதிகரிப்பு என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றம் வாக்குப்பதிவு முடிந்த பிறகு உடனடியாக வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன் படி தேர்தல் ஆணையம் 5 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை இன்று புதன் (22.5.2024) காலை வெளியிடவேண்டும் இல்லை என்றால் தேர்தல் ஆணையம் பாஜகவின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்பது அய்யத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டு விடும்.
உ.பி.யில் வாக்களிக்கத் தகுதியுள்ள வயதான 18 வயது கூட நிரம்பாத 17 வயது சிறுவன் தாமரை சின்னத்திற்கு
8 முறை வாக்களித்ததாகப் பெருமையாக சமூகவலை தளத்தில் காட்சிப் பதிவுகள் பரப்பியது எதைக் காட்டுகிறது?