அனைத்து ஜாதியினரும்அர்ச்சகராக வழிபாட்டுப் பயிற்சி முகாம்! அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாழ்த்து!

viduthalai
2 Min Read

கோவை,மே 21– கோவை மாவட்­டம் சூலூரில் அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்­கின்ற ஆலய வழி­பாட்டு பயிற்சி தமிழ்­நாடு பூசா­ரி­கள் நலச் சங்­கத்­தின் சார்­பில் நடை­பெற்­றது. முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் சமூ­க­நீதி புரட்­சித் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் அனைத்­து ஜாதி­யி­ன­ரும் திருக்­கோ­வில்­க­ளில் வழி­பாட்டு நெறி­மு­றை­கள்­படி சிறப்­பா­கப் பணி­யாற்ற வழி­வகை செய்­யும் வகை­யில், 11-ஆவது ஆலய வழி­பாட்­டுப் பயிற்சி முகாம் சேலத்தை தலை­மை­யி­ட­மா­கக் கொண்ட கோவில் பூசா­ரி­கள் நலச் சங்­கத்­தின் சார்­பில் சூலூ­ரில் நடை­பெற்­றது.
கோவை மாவட்­டம் அர­சூர் தங்­க­நா­யகி அம்­மன் கோவில் வளா­கத்­தில் இப்­ப­யிற்சி கடந்த 5ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நடை­பெற்­றது.இதில் 120 மாண­வர்­கள் பயிற்சி பெற்­ற­னர். இவர்­க­ளில் 15 பேர் பெண்­கள் என்­பது குறிப்­பி­டத்­ தக்­கது. பயிற்­சி­யில் பங்­கேற்ற மாணாக்­கர்­க­ளுக்கு பண்­ண­வாடி ஆதீ­னம் சிறீ வெங்­க­டேஸ்­வர சுவா­மி­ கள் வாழ்த்து வழங்­கி­னார்.

பயிற்சி முகா­மில் கோவில் பூசா­ரி­கள் நலச் சங்க மாநி­லத் தலை­வர் மற்­றும் இந்து சமய அற­நி­லை­யத்­துறை பூசா­ரி­கள் ஓய்­வூ­திய தேர்­வுக்­குழு உறுப்­பி­னர் பி.வாசு தெரிவித்ததாவது: கோவில் பூசா­ரி­கள் நலச்­சங்­கம் தமிழ்நாட்டின் பல்­வேறு மாவட்­டங்­க­ளில் ஆலய வழி­பாட்­டுப் பயிற்சி முகாம்­களை இல­வ­ச­மாக நடத்தி வரு­கி­றது.

கிரா­மப்­பு­றங்­க­ளைச் சேர்ந்த கோவில் பூசா­ரி­கள் இந்த பயிற்சி முகா­மில் பங்­கேற்று பல­ன­டைந்து வரு­கின்­ற­னர். அனைத்­து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்ற அடிப்­ப­டை­யில் தமி­ழ்நாடு அரசு மேற்­கொண்­டு­வ­ரும் திட்­டத்தின் அடி­யொற்றி மேற்­கொண்­டு ­வ­ரும் சிறு முயற்­சியே இந்த ஆலய வழி­பாட்­டுப் பயிற்சி முகாம் ஆகும்.

கிரா­மப்­புற கோவில் பூசா­ரி­கள் 12 நாள்­க­ளி­லேயே ஆலய வழி­பாட்டு முறை­களை எளி­தில் கற்­றுக் கொள்ள முடி­யும் என்­ப­தற்கு இந்த பயிற்சி முகாம் ஒரு எடுத்­துக்­காட்டு. மேலும் 15 பெண் பூசா­ரி­க­ளும் இப்­ப­யிற்சி முகா­மில் பங்­கேற்­றது சிறப்பு அம்­ச­மா­கும்.

தமிழ்­நாடு அரசு இந்து சமய அற­நி­லை­யத்­துறை கோவில்­க­ளில் முதன்­மு­றை­ யாக பெண் ஓது­வார்­களை நிய­மித்­தி­ருப்­பதே எங்­கள் முயற்­சிக்கு முன்­னோ­டி­ யாக அமைந்­தது.அர­சூர் தங்­க­நா­யகி அம்­மன் கோவில் வளா­கத்­தில் நடந்­து­வ­ரும் ஆலய வழி­பாட்­டுப் பயிற்சி முகா­மில் பங்­கேற்­றுள்ள மாணாக்­கர்­க ­ளுக்கு இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு வாழ்த்­துச் செய்தி அனுப்­பி­யுள்­ளார்.முதலமைச்ச­ருக்­கும், அமைச்­ச­ருக்­ கும் கோவில் பூசா­ரி­கள் நலச் சங்­கம் சார்­பில் நன்றி தெரி­வித்­துக் கொள்­கி­றோம். -இவ்­வாறு அவர் கூறி­னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *