பாட்னா, செப். 4– காந்தியார் பிறந்த அக்டோபர் 2ஆ-ம் தேதி “இந்தியா” கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும் என்று அக்கூட் டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
“இந்தியா” கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் மகா ராட்டிர தலைநகர் மும்பையில் 1.9.2023 அன்று முடிவடைந்தது. இதில், மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர் கொள்வது, தொகுதிப் பங்கீட்டுக் கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்குவது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக்கூட்டங் களை ஒருங்கிணைந்து நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், “நாடாளுமன்றத் தேர்தலை பாஜக விரைவாக நடத்தக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. இதைக் கருத் தில் கொண்டே எதிர்க்கட்சிகளா கிய நாங்கள் விரைவாக ஒன்றி ணைந்துள்ளோம். இதனால், தற் போது பாஜக அச்சமடைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சினையாக இருக் காது. இது குறித்த கலந்துரையாடல் “இந்தியா” கூட்டணிக்குள் விரை வில் நடக்கும். காந்தியார் பிறந்த அக்டோபர் 2-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச் சாரம் மேற்கொள்ள உள்ளோம்” என தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவ்
பீகார் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலை வருமான தேஜஸ்வி யாதவ், “பாஜக கூட்டணிக்கு வலிமையான மாற்று தேவை என விரும்புகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டே தற் போது நாங்கள் செயல்பட்டு வரு கிறோம். தற்போது ஒருங்கிணைப் புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. “ஒரே நாடு-ஒரே தேர்தல்” குறித்து ஆய்வு செய்ய மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு முன்பாக, ஒரே நாடு ஒரே வருமான கொள்கையை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண் டும். அனைவருக்கும் பொருளா தார நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் அவர்கள் பிறகு ஒரே நாடு ஒரே தலைவர், ஒரே நாடு ஒரே கட்சி , ஒரே நாடு ஒரே மதம் என்று போய்க் கொண்டே இருப்பார்கள். இவை யெல்லாம் பயனற்ற பேச்சுகள்” என தெரிவித்தார்.