வருந்துகிறோம்

1 Min Read

மற்றவை

மேட்டூர் கழக மாவட்டம், எடப் பாடி, கவுண்டம்பட்டியில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி. மெய்வேல் அவர்களின் வாழ் விணையர் மெ.பச்சமுத்து அம்மாள் (வயது 81) 18.11.2023 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தமிழ்செல்வி, பூங்கொடி, செல்வ ராணி, முத்தழகி, கனிமொழி, மணி யம்மை – ஆகிய ஆறு பெண் மக்க ளும், ஆசைத்தம்பி என்ற ஒரு மகனும் உள்ளனர். எல் லோரும் வியக்கும் வண்ணம் கொழுத்த இராகு காலத்தில் அனைவருக்கும் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, எடப்பாடி நகர துணைத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், நகர் மன்றத் தலைவர் ஜிலானி பாட்ஷா மற்றும் தோழர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

அவர்களது இல்லத்தில் மாலைக்குப் பதிலாக, அரை யாண்டு விடுதலை சந்தா ரூபாய் ஆயிரத்தை தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *