பிரியங்கா காந்தி பேட்டி!
புதுடில்லி, மே 20- பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள் எழுச்சியை நாடு முழுவதும் காண முடிந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி அளித்துள்ள சிறப்புப் பேட்டியை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும்உள்ள விவசாயிகள், தொழிலாளார்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து தரப்பு மக்களும் ஏராளமான பிரச்சி னைகளை சந்தித்து வருவதாகவும், இப்பிரச்சினை களுக்கு தீர்வு காண்பது அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமை என்றும் கூறினார்.
ஆனால் மக்களின் எந்த பிரச்சினைகளுக் கும் ஒன்றிய ஆட்சியாளர்கள் தீர்வு காணவில்லை என்றும் தெரிவித்த பிரியங்கா காந்தி, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட அரசியலை மக்கள் விரும்புவதாகவும் கூறினார். ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், திசை திருப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தான் சென்ற இடங்களில் எல்லாம் பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள் எழுச்சியை காண முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடியின் விமர் சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸ்தேர்தல் அறிக்கையை முழுமையாக படிக்காமல் பிரதமர் மோடி கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும், மக்களின் பிரச்சி னைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாறாக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் காண வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமாக உள்ளதாகவும் விமர்சித்தார்.