ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி! மல்லிகார்ஜுன கார்கே

1 Min Read

புவனேஸ்வர், மே 19- இதற்கிடையே ஒட்டு மொத்த மக்களும் பா.ஜ.க.வை நிராகரித் துள்ளதால் ஒன்றியத் தில் இந்தியா கூட் டணி ஆட்சி அமைவதுஉறுதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவ னேஸ்வரில் செய்தியாளர் களிடம் பேசிய மல்லிகார் ஜுன கார்கே, ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்தின் 24 ஆண்டுகால ஆட் சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டதாக கூறினார். இந்த மக்க ளவை தேர்தல் ஒரு பக்கம் நாட்டு மக்களுக்கும், மறு புறம் மோடி அரசுக்கும் இடையிலான யுத்தம் என்றார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநி லங்களில் பா.ஜ.க.வுக்கு அடித்தளம் இல்லை, இதேபோல், நாட்டின் மற்ற பகுதிகளிலும் 10 ஆண்டு கால ஒன்றிய அரசின் தவறான ஆட்சி யால் மக்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ள தாக விமர்சித்தார்.

மக்கள் பிளவுப்படுத் தும் பிரதமர், வெறுப் புணர்வைத் தூண்டும் பேச்சுகளை மீண்டும் மீண்டும் பேசி வருவதாக சாடினார்.
ஒவ்வொரு இந்திய ரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபா சிட் செய்யப்படும் போன்ற எந்த ஒரு வாக் குறுதிகளையும் நிறை வேற்றாததால் மக்கள் பா.ஜ.க.வை முற்றிலும் நிராகரித்துள்ளதால், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமை வது உறுதி என மல்லிகார் ஜுன கார்கே தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *