எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளும் சர்வாதிகார ஆட்சியை ஏற்க முடியாது : கெஜ்ரிவால் கண்டனம்

viduthalai
1 Min Read

சண்டிகர், மே 18 பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார கூட் டத்தில் கட்சியின் ஒருங்கிணைப் பாளரும், டில்லி முதலமைச்சரு மான கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய கெஜ்ரிவால், ‘‘நமது நாட்டில் நடந்து வரும் சர்வாதிகார ஆட் சியை ஏற்க முடியாது. கடந்த 75 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கும் இதுபோன்ற ஒரு காலகட்டத்தை இந்தியா பார்த் தது கிடையாது. ரஷ்யாவில் உள்ளது போல் இந்தியாவின் நிலைமை மாறி வருகிறது. ரஷ் யாவில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைக்கு அனுப் பப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். இந்தியாவில் என்னை சிறையில் அடைத்தனர். மணீஷ் சிசோடியாவை சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரசுக்கு இடை யூறு ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு அமைச்சர் சிறை யில் அடைக்கப்படுகிறார். எல் லோரையும் சிறையில் அடை யுங்கள். ஒரு கட்சி ஒரு தலைவர் மட்டும் இருப்பார். ஆனால் ஜனநாயகம் உயிரோடு இருக் காது. இதுபோன்ற நிகழ்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *