இராசபாளையம் மாவட்டம் முறம்புவில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா!

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

முறம்பு, மே 18- இராசபாளையம் மாவட்டம் முறம்பு பேருந்து நிறுத்தம் அருகில், கடந்த 6.5.2024 அன்று மாலை 6 மணிக்கு, சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழாப் பரப்புரைக் கூட்டம் நடை பெற்றது.
மாவட்ட ப.க. தோழர் வழவை முத்தரசன் தலைமையில், விருதுநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் முன்னிலையில், இராசை மாவட்டச் செயலாளர் இரா.கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.
இராசை மாவட்டத் தலைவர் பூ.சிவக்குமார் மந்திரமல்ல! தந்தி ரமே! செயல் விளக்க நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினார். பாவாணர் கோட்டப் பொறுப்பாளர் ஆ.நெடுஞ்சேரலாதன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோ.ஞானராஜ், தலை மைக் கழக அமைப்பாளர் இல.திருப் பதி ஆகியோரது உரைக்குப் பின் கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பணிகள் குறித் தும், குடிஅரசு இதழ் பங்களிப்பு குறித்தும் விளக்கி நிறைவுரையாற்றி னார்.

விருதுநகர் மாவட்ட இளைஞ ரணித் தலைவர் இரா.அழகர், முறம்பு ப.க. தோழர்கள் முனீஸ்வரன், இம் மானுவேல், இளம்பிறையன், பூபதி ராஜா, கண்ணன், அய்யனார்பாண் டியன், இனியன் சம்பத், பிபின்ராஜ், மாயப் பெருமாள், பிரபு, ராஜா, தங் கம், மணி, ஆனந்த், பாண்டியராஜ், சிவபாலன், முத்து வைரவன், யோகேஷ் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட ப.க. தோழர் கோ.பெத்தையா நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *