எங்களால் முடியாதா?

1 Min Read

கேட்கிறார் கேரள மாநிலப் பெண் ஷீஜா. “கள் இறக்குவதெல்லாம் எங்களால் மட்டுமே முடியும்” என்று மார்பைத் தட்டிக்கொள்ளும் ஆண்களுக்குச் சவாலாக 2019ஆம் ஆண்டு முதல் கள் இறக்குவதை அன்றாடத் தொழிலாகவே செய்து வருகிறார். கூத்துப்பரம்பரா எனும் சிற்றூருக்கருகில் உள்ள பன்னியோடே கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஷீஜா.
இந்தத் தொழில் ஈடுபட்டுள்ள முதல் பெண் இவர்தானாம் கேரள மாநிலத்தில்.

ஆபத்தை உணர்ந்தும் அஞ்சாமல் அவர் புன்னகைப்பதைப் பாருங்கள். நாற்பதடி உயர பனை மரங்களில் ஏறி இறங்கி வருகிறார். இதற்காக முறைப்படி உரிமம் பெற்றுள்ளார் இவர். நாள்தோறும் குறைந்தபட்சம் பத்துப் பனை மரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றின் மீதும் மூன்று முறையாம்!

நவீனக் கருவிகள் எதையும் உபயோகிப்பதில்லை ஷீஜா. தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட ஓர் ஏணியை வைத்துக்கொண்டு சமாளிக்கிறார். ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் தந்தை பெரியார். ஒரு விதத்தில் இந்த ஷீஜாவும் உச்சத்தை அடைந்து வருகிறார் நாள்தோறும் – பனை மரத்தின் மீது மட்டுமல்ல; தன் வாழ்விலும்தான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *