சந்திக்கு வந்த ஸநாதன தர்மம் – சங்கீத வித்வானின் விளக்கம்!

Viduthalai
6 Min Read

மு.வி.சோமசுந்தரம்

ஹிந்து மதத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்களை, பாபாசாகிப் அம்பேத்காரின் ‘ஜாதியை நிர் மூலமாக்குதல்’ என்ற நூல் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருகிறது. அந்த நூலில், “அத்தகைய ஒரு மதத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற கூறுவதில் நான் எந்த தயக்கமும் காட்ட மாட்டேன். நான் மேலும் கூறுவது என்னைவென்றால், அத்தகைய மதத்தை ஒழிக்க மேற்கொள்ளும் செயல் எந்த வகையிலும் மத விரோத செயலாகாது” என்று அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று, இந்து மதத்தை இடமில்லாமல் ஆக்குவதற்கான அழைப்பா? இல்லை. சிறிதும் சிந்தனையில்லாமல் கடைப்பிடிக்கும் இந்து மதத்தைத்தான் குறிவைத்துக் கூறுகிறார்.

இந்து மதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் அடிப்படையில் ஜாதிய உணர்வு உள்ளவர்கள். அதனால் இந்து மதத்தை சீர்திருத்தும் வழிக்கு ஆலோசனையையும் கூறுகிறார்.
பெரும்பாலான பார்ப்பன ஜாதி மக்களின் கருத்து என்னவென்றால், ஜாதி என்பது, செய்தொழிலை அடிப்படையாகக் கொண்டு, சமூக அமைப்பு முறையில், இயற்கையாக செயல்படும் திட்டமாகும்.இது இந்து மதத்தில் உள்ளடக்கிய ஒரு அம்சமாகும். இவர்களுள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், ஜாதியை மய்யமாகக் கொண்டு வளர்த்துவரும் வன்முறைகளை ஒடுக்க வேண்டும்என்று கூறுகிறார்கள்.

ஆனால், ஜாதி முறையையே ஒடுக்க வேண்டும் என்று கூறுவதில்லை. இவர்கள், வரலாற்றையும், உண்மை நிலையையும் புறம்தள்ளி வருணம், ஜாதிகளுக்கிடையே உள்ள வித்தியாசங்களை விளக்குவதில் ஈடுபடுவதில்தான் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு, அம்பேத்கரின் இந்து மதத்தின் மேலான நேரிடைத் தாக்குதலும், அவருடைய எழுத்துகளையும் படித்து, அவைதவறான தாக்குதல் என்ற கருத்தில் உள்ளனர்.

ஞாயிறு மலர்

எந்த ஒரு கருத்தையோ, கோட் பாடையோ வன்மையாக விமர்சிப்பதை, எந்த சூழ்நிலையில், எந்த இடத்தில், கூறப்பட்ட நேரம், தெரிந்துகொள்ளும் முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று குற்றம் சாட்டும் சிலர், அவர்களுடைய நம்பிக்கை என்ற எண்ணத்தை கைவிடக் கூறுவதாகக் குறைப்பட்டு, அம்பேத்கர் ஒரு சமயம், ”இந்து என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஒரு மனிதனாக நான் இறக்கமாட்டேன்’’ என்று கூறியதைத் தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அம்பேத்கர் எந்த காலக்கட்டத்திலும் நம்பிக்கையாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், பிறப்பினால், இந்து மதத்தின் அசிங்கமான சமூக அமைப்பு சிறையின் உறுப்பினராக இருந்தார். அவர் இறப்பதற்கு முன் அந்த உறுப்பினர் என்ற அடையாளத்திலிருந்து விலகிவிட்டார்.

இன்று, ”ஸநாதன தர்மா’’ என்ற சொற்றொடர், இந்து மதத்துக்கு இணையான சொல்லாகக் கூறப் படுகிறது. அதாவது அதனுடைய சமயச் சடங்குகள், தத்துவங்கள், செயல்முறைகள்ஆகியவற்றை உள்ளடக்கியதானது. மேலும், இஸ்லாம் மதத்துக்கு முன்னதாக இருந்த தொன்மை இந்திய அனைத்து மதங்கள், ஆன்மிக முறைகள், வழக்கங்கள் யாவற்றையும் இணைத்து ஒரு குடையின்கீழ் கொண்டு வரும் சொல்லாக உள்ளது.
இது ஓர் எல்லை மீறிய புதுச்சொல்.

இதை முக்கியமாகப் பார்ப்பனப் பிரிவு மக்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பது மறுக்க முடியாதது. ஒரு சொல்லுக்குப் பொருள், என்றும் ஒன்றாக இருக்காது. புதிதாக சேரும், நீக்கப்படும். திரித்துக் கூறப்படும், இறக்குமதி செய்யும் ஒரு சொல், பொருளில், இடம், காலம், சந்தர்ப்பம், காரணம் பொறுத்து, மாற்றம் அடையும். ‘ஸநாதன தர்மம்’, என்ற சொல்லுக்கும் இது ஏற்புடையது. நான் ஒரு பார்ப்பன குடும்பத்தில் வளர்ந்தேன். அங்கு அந்த ஜாதி சம்பந்தமான வெகுவான சடங்குகளை நடத்தப்படும். நான் சுலோகங்களைக் கற்றேன். வேதங்கள், உபநிஷத்துகளின்செய்யுள்களைக் கற்றேன். என்வளர்ச்சியுடன் புராணம், இதிகாச கதைகளும் சேர்ந்து வந்தன. இந்த நம்பிக்கை ஸநாதன தர்மத்தை சேர்ந்தது என்று எனக்குக் கூறப்படவில்லை. எனக்கு இவை இந்து மதம் என்று அறியப்பட்டது. இதை சிலர் இந்து மதமல்ல, பிராமணியம் என்றனர். அதுவே முற்றும் சரியானது.

“ஸநாதன தர்மம்’ என்ற சொல் ஆன்மிகச் சொற்பொழிவுகளில், ஞானிகள், அறிஞர்களால் முக்கிய மாக பயன்படுத்தப்பட்டது. அல்லது, சடங்குகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் மக்கள் வட்டத்தில் உபயோகத்திலிருந்து இந்த மனிதர்கள் கூட முக்கியமாக, பார்ப்பனியப் பிரிவை சேர்ந்தவர்களாகவும், அவர்களின் வளர்ச்சியைக் கருதுபவர்களாகவும் இருந்தனர். பக்த உணர்வு கொண்ட பார்பபனரல்லாத தமிழர்கள் தங்களை ஸநாதனிகள் என்று கூறிக் கொள்வதில்லை. அவர்கள், மாரியம்மன், காமாட்சி, சிவன், முருகன் போன்ற தெய்வங்களை வழிபடுபவர்கள். அதன்மூலம், தங்களை இந்து மதம், நம்பிக்கையுடன் ஒன்றியவர்கள் என்று கருதும்படி இருந்தனர். எனவே, இந்து மதத்தின் இணையான சொல் என்று பயன்படுத்துவது ஏமாற்று வேலையே.

கடந்த பல நூற்றாண்டுகளிலும், அத்துடன் தற்போதைய பல பத்தாண்டு காலத்திலும் இந்துத்வா தீவிரவாதிகள், ஸநாதன தர்மா என்ற சொல்லை ஓர் ஆயுதமாக எடுத்துள்ளனர். இந்த சொல்லுக்கு அவர்கள் கொடுக்கும் பொருள், பழைமைக்கு எடுத்துச் செல்வதாகும். ஸநாதன தர்மசொல், கருணை, இரக்க உணர்வு கொண்ட சொல்லாகவும், வரவேற்கத்தக்கச் சொல்லாகவும், தன்னைப்பற்றி சிந்திக்கும் நோக்குடைய சொல்லாகவும் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால், இச்சொல், பழிப்பதற்கும், தன்னையே பாராட்டிக் கொள்ளவும், இதுவே பழைமையானது, நன்மை பயப்பது என்று நிரூபிக்கவும், மற்ற எந்த வகையிலும் நம்புவதைக் காட்டிலும், மிகவும் பண்பட்டது என்று காட்டவும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸநாதன தர்மா என்ற சொல்லும், இந்துத்வாவும், வலதுசாரியினரால் ஒன்றாக பிணைக் கப்பட்டுள்ளது. இந்த சொல்லைப் பெரிதும் பயன்படுத்துவோர் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், தாழ்த்தப்பட்டோர் மேல் தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய தீய செயல்களைத் தூண்டிவிடுவாரோடு மட்டில் இந்தக் குற்றச்சாட்டு நின்று விடுவதில்லை.

அரசியல், மத, ஆன்மிக மற்றும் சமூக மேடைகளைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய ஸநாதன தர்மம் தெளிவாகப் பிரிவினையை ஊக்கப்படுத்தும் கருவி.
இந்த சொல்லை ஆதரித்து பேசுவோர் அவர்களுடைய ஜாதி குணாதிசயங்களை அங்கீகரிப்பதை ஏற்க மறுப்பவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், சமீபத்தில் கூறியது:
“நம்முடைய சமூகத்தில், சமூக ஏற்றத் தாழ்வு உள்ளதற்கான வரலாறு உண்டு.

நம்முடைய சமூக அமைப்பின் தன்மையில் நம் மக்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக வைத்துள்ளோம். அவர்களுடைய வாழ்க்கை விலங்குகளுடைய வாழ்கையைப்போல் இருந்தாலும் நாம் கவலைப்பட்தில்லை. இந்த நிலை குறைந்தது 2000 ஆண்டுகள் தொடர்ந்து இந்த பிரிவினை முறை தொடரும் காலம் வரை இடஒதுக்கீடுமுறை தொடர வேண்டும்.’’
இவர் இடஒதுக்கீட்டை தொடர்பு படுத்தி ஜாதி வேறுபாடு பற்றி பேசுகிறார் என்றாலும், ஜாதித் தீமைகளை அழித் தொழிக்க வேண்டும் என்பதற்கான ஒப்புதல் எங்கே? அனைத்து ஜாதிவழி சிறப்புத் தகுதியைப் பெற்ற இந்துக்கள் தங்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஜாதி உணர்வை ஒத்துக்கொண்டு மாற்றம் பெற வேண்டும்.

வர்ண முறையை தொடர்ந்து நியாயப்படுத்தும் இந்து சமய குருக்களும் ஆன்மிகவாதிகளும் உள்ளனர். புத்தகங்கள் மூலமாகவும், செயல் வழியாகவும், நிலை நிறுத்தப்பட்டதையும், பிரச்சாரம் செய்வதையும், கூர்ந்து விமர்சிப்பதால், ஜாதி பாகுபாட்டை நீக்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.
ஜாதித் தனித் தகுதி பெற்ற மனிதர்களிடையே ஆன்மிகவாதிகள் பலர் விளக்க உரையாற்றுகிறார்கள். ஆனால், அவர்களுடைய மத, இன சகிப்புத் தன்மையற்ற போக்கை ஒத்துக் கொள்ள வலியுறுத்துவதில்லை. இன்று ஸநாதன தர்மம் அனைத்து இந்துக்களயும் சேர்ந்தது என்று பறைசாற்றுவோர் வேறு ஜாதிப் பிரிவு மனிதர் மூலம் தோன்றும் வன்முறையைக் கண்டு ஒதுங்கி விடுகின்றனர். அவர்கள் ஸநாதன தர்ம அமைப்பிலுள்ள சகோதரனுடைய செயலுக்கு எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஸநாதன தர்மத்தைக் காப்பாற்ற ஆர்வம் கொண்டவர்கள், இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர்களுடைய அறிவையும், உணர்வையும் வழங்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை உணர வேண்டும்.
அம்பேத்கர் கூறுவது:
“ஏதும் நிலைத்ததென்பது இல்லை என்றும், ஏதும் அழியாதது என்பதும், ஸநாதனம் என்ற ஒன்று இல்லை என்பதும், அனைத்தும் மாற்றம் பெறுபவை என்பதும் நியதி. இந்த மாற்றம், தனி ஒருவரின் வாழ்க்கை விதிமுறை இல்லாமல் சமூகத்துக்கே உரியது என்பதை இந்துக்கள் சிந்திக்க இன்னும் நேரம் வரவில்லையா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.’’ அவர் பிரபஞ்ச மாற்றத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால், தத்துவத்தை ஆய்வு செய்வதைக் கேட்கிறார்.

(முற்போக்கு சீர்திருத்த நோக்குடைய சிறந்த, இசைவாணர் டி.எம்.கிருஷ்ணா எழுதிய “தி இந்து’’ ஆங்கில இதழ் (12.9.2023)
கட்டுரையின் மொழியாக்கம். – மு.வி.சோமசுந்தரம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *