பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்

1 Min Read

வாசிங்டன், மே 17- புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும் அமெரிக் காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப் பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவை ஆய்வு செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்காக 2 நவீன ரக செயற்கைக்கோள்களை இந்தமாதம் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட்டு துருவப் பகுதிகளின் மேல் உள்ள புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
காலநிலை மற்றும் பனி மாதிரிகளை ஆராயும் வகையில் விஞ்ஞானிகள் அந்தத் தகவலை பயன் படுத்த உள்ளனர். இதன்மூலம் உலகின் கடல்நீர் மட் டம் உயர்வு, வானிலை மாற்றம் மற்றும் பனிக்கட்டிகள் உருகுதல் எத்தைகய விளைவுகளை அளிக்கக்கூடும் என்பதற்கான கணிப்புகளை அவர்கள் பெற உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *